"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்பு விசாரணை துவங்கப்படும்"


கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்புதான் விசாரணை துவங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் காலமானார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அவருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வந்த அவர் பணிகளைத் தொடங்கினார்.

இதனிடையே இன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து விசாரணை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கோவையில் ஒரு துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறுமுகசாமி கோவை வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பெறப்பட்ட பின்னரே விசாரணை துவங்கப்படும். இரு நாட்களுக்குப் பிறகு சென்னை சென்ற பின்புதான் இதுகுறித்தான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...